Monday, April 18, 2011

அன்புக்குரிய பெறோர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி


சமீப காலமாக நமது சமதாயத்திலுள்ள இளம் குமரிப் பெண்கள் அந்நிய காபிர்களுடன் ஓடிப்போகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் ஆதிகரித்த வண்ணமுள்ளன. இது நிச்சயமாக இஸ்லாமிய எதிரிகளின் சதித் திட்டமேயன்றி வேறில்லை. நமது சமுதாய பெண்களை கவரும் வகையில் அவர்களிடம் அன்பாகப் பேசி தங்களது வலையில் விழ வைத்து பின்னர் அவர்களை மதம் மாற்றி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து நடு வீதிக்குக் கொண்டு வருவதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தை வீழ்த்தி விடலாம் என்று திட்டமிட்டு சில தீய சக்திகள் செயல் பட்டு வருகின்றன. இத்தகைய சதிகாரர்களின் சூழச்சி வலையில் நமது பெண் பிள்ளைகள் சிக்கி விடாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நமது சமுதாய பெற்றோர்களை அன்புடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

பெற்றோருக்கு சில ஆலோசனைகள்:


1) நீங்கள் இறையச்சத்துடன் இருப்பதுடன் அதை உங்கள் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து போதித்து வாருங்கள்.
2)
உங்கள் பிள்ளைகளுக்கு வீட்டிலும் சரி வெளியிலும் சரி தனிமை சூழ்நிலையை உருவாக்கித் தராதீகள்
.
3)
எந்த காரணத்துக்காகவும் செல்போனை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்
.
4)
டிவி யில் வரும் பயனுள்ள நிகழ்ச்சிகளை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதியுங்கள்
.
5)
பள்ளி, கல்லூரி, டியூஷன் வகுப்பு மற்றும் தோழிகளின் வீடு போன்ற இடங்களுக்கு தனியாக செல்ல அறவே அனுமதிக்காதீர்
.
6)
உங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனியுங்கள்
.
7)
அன்பின் பெயரால் அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுக்காதீர்கள்
8) குடும்பத் தலைவர்களுக்குத் தெரியாமல் அந்நியர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளாதீர்கள்.
9)
பெண் பிள்ளைகளுக்கு ரெகுலர் கோர்ஸ் (Regular Course) படிப்பை விட தொலை தூரக் கல்வியே (Distance Education)சிறந்தது
.
10)
உங்கள் பிள்ளைகளின் தவறான போக்கு பற்றி யாரேனும் உங்களுக்கு தகவல் தந்தால் அதை உதாசீனப் படுத்தாதீர்கள்.

மேற்கண்ட ஆலோசனைகளை கண்டிப்புடன் கடைபிடித்தால் நமது எதிர்கால சமுதாயத்தை ஒழுக்கச் சீரழிவிலிருந்து எளிதில் காப்பாற்றி விடலாம் இன்ஷா அல்லாஹ்.

ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்(JAQH) குமரிமாவட்டம்

No comments:

Post a Comment